புதிதாக ஆயிரத்து 100 பாடசாலை அதிபர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படுமென கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆயிரம் அதிபர்கள் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு கல்வி நிர்வாக சேவைக்கென 850 பேரும், கல்வியியற் கல்லூரி ஆசிரியர் சேவைக்கென ஆயிரத்து 190 பேரும் கல்வியமைச்சினால் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அரசியல் தலையீடின்றி பரீட்சைகளினூடாக அவர்களின் தெரிவு இடம்பெற்றிருந்தது. தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதோடு அதிக புள்ளிகளை பெற்றவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டது. தற்போது வெற்றிடமாகவுள்ள அதிபர் சேவைக்கான தெரிவுகள் உரியமுறையில் இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.