தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு 30 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்கப்படவுள்ளது. ஒப்பந்த நிறுவனங்களுடாக நட்டஈடு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் திகதி தாமரை கோபுரத்தின் கட்டுமாண பணியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரொருவர் கோபுரத்தின் 16வது மாடியில மின்தூக்கி பொருத்துவதற்காக காணப்பட்ட இடத்திலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோரின் பெயரில் குறித்த நட்டஈட்டு தொகை வைப்புச்செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.