பரீட்சை கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் ஆகியவற்றை செலுத்துவதற்கு மாற்று நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நிலவுகின்ற தபால் ஊழியர்களின் பணி புறக்கணிப்பு காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சகல பரீட்சைகளுக்குமான கட்டணங்களை பிரதேச செயலக காரியாலயம் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயம் ஆகியவற்றில் செலுத்த முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இதேவேளை போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை பிரதேச செயலக காரியாலயத்தினூடாக செலுத்தக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11ம் திகதி முதல் தபால் ஊழியர்கள் பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.