சர்வதேச ரீதியில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் உலக இரத்த தான தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
யார் யார் இரத்த தானம் செய்யலாம் ? யார் செய்யக்கூடாது ?
நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண். 18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.
குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.
இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?
ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.
இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? 10 நிமிடம்.
இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்? 20 நிமிடம்.
இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது? 350 மில்லி. (நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது) எடுக்கப்படுகிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.
இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்? 10 லிருந்து 21 நாட்களில்
இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது? நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது. 3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.
சர்வதேச ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்த தானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும்.