வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல், அரசியல் அமைதியற்றமை, சிவில் பதற்றம், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டிற்கு உரியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கான பணிகளை மிகவும் முறையாகவும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவும் மேற்கொள்வதற்கு நஷ்டஈட்டை அல்லது இழப்பீட்டை வழங்குவதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டவிதிகளை தயாரிப்பதற்காக அமைச்சரவையினால் தற்பொழுது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதற்கான திருத்தச்சட்டமூலத்தை தயாரிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலக திருத்த சட்டத்துடன் தொடர்புபட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து அந்த திருத்த சட்டத்திற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.