உலக கிண்ண கால் பந்து போட்டிகள் நாளை மறுதினம் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. கால் பந்தாட்ட போட்டிகளே உலகில் கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் விளையாட்டு ஆகும். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அதற்கு பிறகு தான். கால் பந்தாட்டத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் உலக கிண்ண போட்டிகள் என்றால் உலகெங்குமுள்ள மக்கள் ஒரு மாதத்திற்கு எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இவ்வாறு கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த கால்பந்தாட்டத்தில் சுற்றிச்சுழன்று வரும் கால்பந்துகள் தற்போது எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.
00டப்
இப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் கால்பந்து பல சிறப்பம்சங்களை கொண்டது. இம்முறை பயன்படுத்தப்படவுள்ள கால்பந்தானது எடிடாஸ் டெல்ஸ்டார 18 என பெயரிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் தெளிவாக தெரியும் வகையில் பந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமான கால்பந்தில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப் தொழிநுட்பத்தின் ஊடாக பந்து மைதானத்தில் எங்குள்ளது என்பதை தெரிந்துகொள்ளமுடியும். கடந்த 1970 ம் ஆண்டிலிருந்து எடிடாஸ் நிறுவனம் உலக கிண்ண கால்பந்துகளை தயாரித்து வருகின்றது. அப்போதய கால்பந்தினை டெ;ல்ஸ்டார் என அழைக்கப்பட்டது. தகவல் ஒலிபரப்பிற்காக நாசா அனுப்பிய செயற்கைக் கோளை நினைவு படுத்தும் வகையில் அழைத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கால்பந்துகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2018 உலக கிண்ண கோப்பைக்கு பயன்படுத்தப்படும் டெல்ஸ்டார் 18 என பெயரிடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த கால்பந்துகளை பாகிஸ்தானில் சியால்கோட் நகரில் தயாரிக்கப்படுகின்றது. 2014 ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கும் இங்குதான் கால்பந்து தயாரிக்கப்பட்டது. மாதம் 7 இலட்சம் கால்பந்துகளை இந்நிறுவனம் தயாரிக்கின்றது. வழக்கமாக கால்பந்துகள் கைகளால் தயாரிக்கப்படும். இம்முறை உலக கால்பந்துகள் டேர்மோ முறையில் சூடேற்றப்பட்டு ஒட்டவைக்கப்படுகின்றன. 2014 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளிலும் இம்முறையில் தயாரிக்கப்பட்ட கால்பந்தே பயன்படுத்தப்பட்டது. 1990 முதல் 2010 வரை இடம்பெற்ற உலக கிண்ண போட்டிகளுக்கு கைகளால் தயாரிக்கபட்ட பந்துகளே பாகிஸ்தான் வழங்க வந்தது. உலகிலேயே அதிகளவான கால்பந்துகள் பாகிஸ்தானில்தான் தயார் ஆகின்றன. பாகிஸ்தான் சியால்கோட்டில் ஆண்டுக்கு 3 கோடி பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இது உலகளவில் தயாரிக்கப்படும் பந்துகளில் 40 சதவீதமாகும். நாளை மறுதினம் உலக கிண்ண போட்டிகள் ஆரம்பமாகின்றன. அது பற்றிய தொகுப்பொன்று நாளை வசந்தம் ரிவியில் ரசிகர்களுக்காக தருகிறோம்.