தனிமை கொடுமை என்று பொதுவாக கூறுவார்கள். இவ்வாறு தனிமையில் இருப்பவர்களுக்கு ஆயுள் நாள் குறைவாகவே காணப்படுவதாக தற்போது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. டென்மார்க்கை சேர்ந்த பல்கலை மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது.
ஆய்விற்காக இவர்கள் பதின் மூவாயிரத்திற்கும் அதிகமான நோயாளிகளை தெரிவு செய்துள்ளனர். இவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உங்களுக்கு எப்படி ? உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன் ? புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் பதிப்படைந்தீர்கள் என வினவியபோது அதற்கு பதில் அளித்த தங்களை பராமரிக்க யாரும் இல்லை என்கின்றனர். அத்துடன் அவர்கள் தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது என்றனர். தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.