கரந்தெனிய பிரதேச சபை உறுப்பினரான டொனால்ட் சம்பத் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு ஊரகஸ்மங்சந்தி, கொரகின பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.