மிஹின்லங்கா நிறுவனத்தை உருவாக்கும் போது கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட மோசமான நடவடிக்கைள் தற்போது பகிரங்கமாகி வருவதாக இடதுசாரி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இடதுசாரி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளர் சமீர பெரேரா உரையாற்றுகையில் :
“ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பல்வேறு விடயங்கள் தற்போது பகிரங்கமாகி வருகின்றன. மிஹின்லங்கா தனியார் நிறுவனம் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் தற்போது வெளிவர ஆரம்பமாகியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார். கம்பனி பதிவாளர் திணைக்கள அதிகாரிகள் இந்த விண்ணப்பத்தில் தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள். 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுகின்றது. ஆனால் 27ஆம் திகதி அதற்கு அனுமதி கிடைக்கின்றது. அதாவது தவறுகள் நிறைந்த விண்ணப்பத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. நிதியமைச்சின் செயலாளர், முன்னாள் விமான படை தளபதி, பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளரான சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் இதன் ஏனைய பங்களாகிகளாவர். இவர்கள் நால்வர் தான் பங்குதாரர்கள். பெயரளவில் 500 மில்லியன் ரூபாவை காட்டியே இந்த கம்பனி பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள் எவ்வாறு தனியார் நிறுவனங்களை பதிவு செய்து அதனை அரச சொத்துக்களாக மாற்றி இந்த வர்த்தகத்தை எப்படி செய்தார்கள் என்பது தான் நாங்கள் கேட்கும் கேள்வியாகும். இந்த பங்குகளின் சம உரிமை இவர்களுக்கு தான் உள்ளது. இவற்றை வழிநடத்தியவர்கள் இந்த நபர்கள் தான். இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இன்று நஷ்டத்தில் இயங்க காரணம் இதற்கு இலவசமாக எரிபொருள் வழங்கியமையே ஆகும். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பு படையினர் கூட தாம் விரும்பியது போல் வர்த்தகம் செய்யவும், சட்டங்களை வளைக்கவும், சட்;ட விரோத செயல்களை செய்யவும், தாக்குதல்களை மேற்கொள்ளவும், அச்சுறுத்தவும் காhணமல் போனதற்கும் காரணம் ராஜபக்ஷ ஆட்சியே ஆகும். அக்குடும்பம் தான் இவை அனைத்திற்கும் பொறுப்புகூற வேண்டும். முன்னாள் இராணுவ வீரர்களை இணைத்து கொண்டு பலம்வாய்ந்த இராணுவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்க அவர்கள் தயாராகி வருகின்றார்கள். “
என தெரிவித்தார்