அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய திட்டமொன்று தயாரிக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 2030ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. மண்சரிவு, நிலம் தாழிறங்கல், வெள்ளம் ஆகிய அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வது தொடர்பான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அனர்த்த அபாய எச்சரிக்கையினால் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்படும் மக்கள் தொடர்பில் முதற்கட்ட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கென புதிய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.