12 இலட்சம் இலங்கை ரூபாவை எடுத்துச் செல்ல முயன்ற சீன பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இப்பணம் மீட்கப்பட்டது. இப்பெண்ணிடமிருந்து 12 இலட்சத்து 75 ஆயிரம் இலங்கை ரூபா கைப்பற்றப்பட்டது. 37 வயதான குறித்த பெண்ணிடம் இக்கடத்தல் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.