இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் சப்ரகமுவ தென் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.