பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக APP ஒன்று அறிமுகப்படுததப்பட்டுள்ளது. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் இப்புதிய APP அறிமுகப்படுத்தப்பட்டது. ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில் ;
“பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது பகிடிவதை கலாசாரம் உருவாகியது. அதன் மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதன் மூலம் மறைந்து கிடந்த திறமைகள் பல வெளிப்பட்ட சம்பவங்களை நாங்கள் அவதானித்துள்ளோம். தற்போது பகிடிவதையானது மாணவர்கள் விரும்பாத அதேவேளை அவர்கள் பல்கலைக்கழகத்தை வெறுத்து வெளியேறும் அளவுக்கு மாறியுள்ளது. திடீர் பகிடிவதைகள் மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் இடம்பெறுவதை இன்று அறிமுகப்படுத்தப்பட்ட APP இன் மூலம் தடுக்கலாமென நான் கருதுகின்றேன். “என தெரிவித்தார்.