வடகொரியா தொடர்பில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டுமென தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே யின் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணுவாயுத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான முதற்கட்ட திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவது முக்கிய விடயமாகும். இதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை சர்வதேச சமூகம் வடகொரியாவின் தற்போதைய நிலை தொடர்பில் சரியாக புரிந்துகொள்ளவேண்டுமென தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே யின் தெரிவித்துள்ளார்.