பிலிப்பைன்ஸை சூறாவளி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் சூறாவளி பிலிப்பைன்ஸை அண்மிக்குமென எதிர்ப்பார்க்க்பட்டுள்ளது. மணிக்கு 255 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென அந்நாட்டு காலநிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது. மக்களுக்கு அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் ஏற்படுமென இனங்காணப்பட்ட பிரதேசங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூறாவளியுடன், கடும் மழையும் பெய்யக்கூடுமென அந்நாட்டு காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. மழை அதிகரிக்குமெனில் வெள்ளம் மற்றும் மண்சரிவும் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இதற்கமைய முன்னாயத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு நிவாரண குழுவினர், மீட்பு படையினர் ஆகியோர் தயார்நிலையில் உள்ளதாக பிலிப்பைன்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.