இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 118 கிலோ கேரள கஞ்சா யாழ் காங்கேசந்துரை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியைச்சேர்ந்த இருவரும் மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.சந்தேக நபர்கள் கஞ்சா பொதியுடன் கரைப்பகுதிக்கு வரும் போதே கைதாகியுள்ளனர்.சந்தேக நபர்கள் காங்கேசந்துரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.விசாரணையின் பின்னர் சந்தேக நபர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.