ஆசிய கூடைபந்து இறுதி போட்டியில் வெற்றியீட்டி ஆசிய கூடைப்பந்து சம்பியன் எனும் பெருமையை பெற்றுள்ளது. சிங்கப்பூர் அணியுடன் மோதிய இலங்கை 69-50 எனும் அடிப்படையிலேயே இந்த வெற்றியை பெற்று சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது.
சிங்கபூரில் நடைபெறும் ஆசிய கூடைபந்து போட்டி தொடரில் இம்முறை இலங்கை அணி தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்துள்ளது. முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி 55 – 46 என்ற அடிப்படையில் ஹொங்கொங் அணியை தோல்வியடையச்செய்தது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் சிங்கபூர் அணி, கூடை பந்து சம்பியான மலேசியாவை 51-43 என்ற அடிப்படையில் தோல்வியடையச்செய்தது. முதல் சுற்றில் சிங்கபூர் அணி இலங்கை அணியுடன் தோல்வியடைந்தது. இப்போட்டி தொடரின் இறுதி போட்டி இலங்கை மற்றும் சிங்கபூர் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றது.
இலங்கை அணிக்கு எமது இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.