25 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசியை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.