28 ஆயிரம் மெற்றிக் டொன் டீசலுடன் கூடிய கப்பலொன்று இன்று நாட்டை அண்மித்தது. மேலும் 3 எரிபொருள் ஏற்றிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எரிபொருள் இன்மையால் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் பல தொடர்ந்தும் செயலிழந்துள்ளன. இதன் காரணமாக தொடர்ச்சியாக 3 வது நாளாக இன்றும் 7 அரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது. எவ்வறெனினும் எரிபொருள் விலை மற்றும் மின் பட்டியல் விலையை அதிகரிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
37 ஆயிரத்து 300 மெற்றிக் டொன் டீசலுடன் வருகை தந்த கப்பலிலிருந்து எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.