போதைப்பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரை மையப்படுத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தபக்பட்ட உடன் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார தெரவித்துள்ளார். இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 100 சிறுவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து எதிர்வரும் ஜூலை 2 ம் திகதிக்கு முன்னர் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.