லுணுகம்வெஹர பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெவ்ரம்வெஹர பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு தொகை ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் தணமல்வில பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களை இன்றைய தினம் திஸ்ஸமஹாராம நீதிமன்றில ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.