ரத்மலானை சக்கிந்தா ராம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன் கேர்ணல் ஒருவரின் வீட்டிற்கு அருகிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கேர்ணலை அழைத்துச்செல்வதற்காக கெப் வண்டியைச் செலுத்தி வந்த இராணுவ கோக்ரல் இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்தார். முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.