வவுனியாவிலுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் 21 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
வவுனியா பட்டாணிச்சூ பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையமொன்றில் இன்று அதிகாலை தீ பிடித்துக்கொண்டது. இதில் 21 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. மின்சார ஒழுக்கே இவ்விபத்திற்கு காரணமென எதிர்பார்க்கப்படுகிறது. வவுனியா பொலிசார் இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.