நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று மெஞ்சஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.ஏற்கனவே இங்கிலாந்து அணி 4-0 எனும் அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் வலுவான ஒரு நிலையிலுள்ளது.இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் வெற்றி கொள்ளும் முகமாக இன்றைய போட்டியிலும் ஆஸி அணிக்கு நெருக்கடியை கொடுப்பதற்கான திட்டத்தில் இங்கிலாந்து அணி இருப்பதாக கிரிக்கட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.எப்போழுதும் இரு அணிகளுக்குமிடையிலான போட்டி தொடர் நடைபெறுகின்ற போது அதிக இரசிகர்களின் எதிர்பார்ப்பை பெறுகின்றமை குறிப்படத்தக்கது.இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற் சிறு ஆறுதலையாவது பெற வேண்டுமெனும் முனைப்போடு ஆஸி அணி களமிறங்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.