இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான இலங்கை அணிக்கு தீர்க்கமானதுமான போட்டி இன்று கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இன்றைய போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட் தினேஷ் சந்திமால் விளையாடாத நிலையில் இன்றை போட்டியில் இலங்கை அணியை ரங்கன ஹேரத் வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மாத்திரமே தொடரை சமநிலைப்படுத்த முடியும்.ஏற்கனவே மேற்கிந்திய அணி 1-0 எனும் அடிப்படையில் முன்னிலையிலுள்ளது.போட்டி இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.