இந்த வருடம் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வி. குணதிலக தெரிவித்துள்ளார்.இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் 40 சதவீதமான விண்ணப்பங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை எனவும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் சில விண்ணப்பங்கள் குறைபாடுகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்படாமையின் காரணமாக பல குறைபாடுகள் இருப்பதாகவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ள அதேவேளை இம்முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்களை விரைவில் அனுப்பி வைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.