கடற் குதிரைகள், சில மருந்து பொருட்கள் மற்றும் மரங்களில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் என்பவற்றை சீனாவுக்கு கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 35, 37 மற்றும் 40 வயதான சீன பிரஜைகளாகும். பயணப்பைகளில் தேயிலையுடன் மறைத்துவைத்து குறித்த கடற்குதிரைகளை எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 6 முதல் 11 சென்ட்ரீ மீற்றர் நீளமுள்ள குறித்த கடற்குதிரைகள் சீனாவில் சூப் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக தெரியவருகிறது. இவர்கள் குறித்த பொருட்களை நீர்க்கொழும்பு பகுதியிலிருந்து வாங்கியிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.