நாளைய தினம் கண்டி-குண்டசாலை ஆரத்தனநீர் சுத்திகர்ப்பு நடவடிக்கை காரணமாக சில பகுதிகளில் 10 மணித்தியாலய நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.மெனிக்கின்ன மஹவத்த முதல் பொடிகல பிரதேசம் வரையும் அதேபோல் மல்பான வீதி, கொனவல வீதி, திகன நகரம், விக்டோரியா வீதி போன்ற பகுதிகளில் நீர்வெட்டு இடம்பெறும்.
நாளை காலை 7 மணி தொடக்கம் 5 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.