கெக்கிராவ எப்பாவெல வீதியில் பஸ் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கெக்கிராவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியொன்று கும்புக்கந்த பகுதியில் முச்சக்கர வண்டியில் மோதுண்டு அருகிலிருந்து மதிலிலும் மோதி விபத்துக்குள்ளாகியது. பஸ் வண்டியில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.