தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடுவலை, பின்னத்துவ, வெலிபென்ன, கடவத்தை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் குறித்த வாகன நெரிசல் காணப்படுகிறது. வார இறுதி விடுமுறை என்பதால் அதிகளவான மக்கள் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவதே குறித்த வாகன நெரிசலுக்கு காரணமென வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையூடாக பயணித்து வருவதாக தெரியவருகிறது.