போலி நாணயத்தாள்களுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உகன பண்டாரகம பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் 03 மற்றும் ஆயிரம் ரூபா நாணயத்தாளொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்கள் 23 மற்றும் 24 வயதான ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளாவர். அவர்களை இன்றைய தினம் அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் உகன பொலிசார் தெரிவித்துள்ளனர்.