இஸ்லாமியர்களின் பிரதான வணக்கஸ்தலமான மக்கா மாநகரில் பெய்து வரும் அடை மழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்படலாமென சவுதி அரேபிய வளிமண்டலவியல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இம்மழையுடனான காலநிலை இன்று இரவு வரை நிலவும் என அந்நாட்டு வளிமண்டலவியல் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மக்கா மாநகரில் கடும் காற்று வீசியுள்ளது. இப்பகுதியில் 2 மில்லியன் ஹஜ் யாத்திரிகர்கள் கூடாரங்களில் தங்கியுள்ளனர். இவர்களின் நலன் கருதி சவுதி அரேபிய அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை செய்துள்ளது.