கண்டி ராகலை பிரதான வீதியின் கட்டுகஸ்ஹின்னே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கெப்ரக வாகனமொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடனொன்று நேரே மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.