பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக உறுப்பினரான மஞ்சுல சமிந்த எல்வல எனப்படும் மல்வத்த மஞ்சுவிடம் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அவரிடம் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அடுத்தகட்ட விசாரணைகள் இடம்பெறுமென குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் மனித படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரென தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பேலியகொட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட அவரிடமிருந்து 5 துப்பாக்கி ரவைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், இரு சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 37 தேசிய அடையாள அட்டைகள் ஆகியன கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.