பரீட்சை நிலையங்களின் அருகில் தொலைதொடர்பு உபகரணங்களை செயலழிகச்செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இராணுவம் மற்றும் தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பங்களிப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பரீட்சை மோடிசகளை தடுப்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனம் பூஜித தெரிவித்தார்.
க.பொ.த உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 6 ஆரம்பமாகி செப்டம்பர் முதலாம் திகதி நிறைவடையும். இப்பரீட்சைகளின் போது விசேட ஏற்பாடுகள் பலவற்றை நாம் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் டிவைசஸ் பயன்பாட்டை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சை மண்டபங்களில் இவற்றை சேகரிக்க செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இலங்கை இராணுவத்துடனும் தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்துத்தல்கள் ஆணைக்குழுவுடனும் நாங்கள் பேசியுள்ளோம். தெரிவு செய்யப்பட்ட சில பரீட்சை மண்டபங்களில் இவற்றை செயலிழக்கச்செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மேலும் குறிப்பிட்டார்.