குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி போலி பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், அதிகாரிகளால் அவர் கைதாகியுள்ளார். சந்தேக நபர் ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயதான நபரென தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர் வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளவரா என்வது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.