இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று மதவாச்சி பூனேவ இராணுவ முகாமிற்கு அருகில் பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்தக்குள்ளானதில் 19பேர் காயமடைந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கான காரணமென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.