இஸ்ரேலின் செயற்பாடுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. காஷா எல்லைப்பகுதியில் பலஸ்தீனியர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களையடுத்து இக்கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இரு தரப்புக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்று வருகிறது. காஷா எல்லையிலுள்ள நுழைவாயிலை இஸ்ரேல் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் தீர்மானமென ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.