கொழும்பில் மகளிர் பாடசாலைகளை மையப்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். பல்வேறு விற்பனை முறைகளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகளை போதைப் பொருள் வர்த்தகர்கள் முன்னெடுததுள்ளனர். இந்நிலையில் மேல் மாகாணத்தில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து சிறுவர்கள் மற்றும் மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சினால் புதிய சந்தைப்படுத்தல் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போதைப்பொருள் விற்பனையில் பாடசாலை மாணவர்கள் தொடர்புபட்டுள்ளமை கவலைக்குரிய விடயமென கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வலப்பனையில் இடம்பெற் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது பாடாசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் அவசியம் தண்டிக்கப்படவேண்டுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.