அனுமதிப்பத்திரமின்றி பெருமளவு மருந்து மாத்திரைகளை எடுத்துச்சென்ற மூவர் மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்லடி பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்திரைகளை எடுத்துச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களின் இருவர் மட்டக்களப்பை சேர்ந்தவர்களெனவும், மற்றையவர் கொழும்பை சேர்ந்தவரெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.