ஜப்பானில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் தாக்கம் காரணமாக 199 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் ஆபத்தான இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக ஜப்பானில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.