உலக கிண்ணத்தொடர்களில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் கேன்ஸ் வில்லியம்ஸன் தலைமையிலான நியுசிலாந்து அணியும் அரையிறுதியில் மோதவுள்ளன. கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அரையிறுதியில் இந்திய நியுசிலாந்து அணிகள் மோதின. விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையில் குறித்த போட்டி இடம்பெற்றது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரினதும் தலைமையில் இரு அணிகளும் மோதவுள்ளன. நாளைய தினம் முதலாவது அரையிறுதி போட்டி மென்செஷ்டரில் இடம்பெறவுள்ளது.