தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுத் மடகும்புர தோட்டத்தில் கொழுந்து பறித்தக்கொண்டிருந்த 18பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி நேற்றும் இன்றும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.சவுத் மடகும்புற தோட்டத்தின் கீழ் பிரிவின் கீழ் பிரிவு தேயிலை மலையில் வேலை செ;ய்து கொண்டிருந்த போது இன்று காலை 10 மணியளவில் குளவித்தாக்கதுலக்கு இலக்கானவர்களில் கடுமையான பாதிப்புக்குள்ளான எட்டுப் பேர் மடக்கும்புற பிரதேச வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே தோட்டத்தில் தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மரத்திலிருந்த குளவிகள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
நோயாளிகள் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லும் போது குறித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருப்பதில்லையென்றும் வைத்தியர் பிரத்தியேக வைத்திய பிரிவொன்றை அவர்கள் நடாத்துவதினால் காலம் தாழ்த்தி வருவதாகவும் நோயாளர்களை கொண்டு செல்ல எம்பியூலண்ஸ் வண்டி இருந்த போதிலும் அதற்கும் சாரதிஇல்லையெனவும் சொந்த செலவில் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகவும் இப்பிரதேச மக்கள் பிரதிநிகள் அக்கறை இல்லாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.