இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வருடத்தில் கடந்துள்ள மாதங்களில் 42 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 21 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் பெறும் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கென பல்வேறு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளினூடாக கருத்துக்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. அதற்கமைய இன்றையதினம் தனியார் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.